பாகிஸ்தானில் குருத்வாராவிற்கு செல்ல முயன்ற இந்திய தூதரக அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்

பாகிஸ்தான் குருத்வாராவில் இந்திய தூதரக அதிகாரிகள் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாகூர் அருகில் உள்ள குருத்வாராவிற்கு செல்ல முயன்ற இந்திய தூதர் அஜய் பிசாரியா, சில மாதங்களுக்கு முன்பு தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், குருத்வாராவிற்கு வரும் இந்திய பயணிகளை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகள் ரஞ்சித் சிங் மற்றும் சுனில்குமார் ஆகியோர் சென்றனர். ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்க பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

வழிபாடு நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டதால் இந்திய அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பாகிஸ்தானின் இந்த செயலுக்கு கண்டனம் வலுத்துள்ளது.

Exit mobile version