சொந்த மண்ணில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸ்திரேலியா?

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் இருபது ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இந்தியாவுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முன்னதாக கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்திருந்தது. சொந்த மண்ணில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.

உலக கோப்பைக்கு முன்பாக இரு அணிகளும் விளையாடும் கடைசி சர்வதேச போட்டிகள் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்திய அணியில் கேப்டன் கோலி, பும்ரா இருவரும் சிறு ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் களமிறங்குகின்றனர். இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ் ஆர் விளையாட்டு மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Exit mobile version