இந்தியா-ஆஸ்திரேலியா 2-வது டி20 போட்டி மழையால் ரத்து

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி, மழையால் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, 2-வது போட்டியில் வெற்றியை ருசிக்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர். இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு 132 ரன்கனை ஆஸ்திரேலியா வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இந்தநிலையில், மழை வந்ததால் 2-வது போட்டி கைவிடப்பட்டுள்ளது. இது இருநாட்டு ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Exit mobile version