இந்தியா-இங்கிலாந்து அணிகள் நாளை மோதல்

 

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2க்கு பூஜ்யம் என கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டி, நாட்டிங்காமில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சுழல்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக, கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் களமிறக்கப்பட உள்ளனர். 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற்று, விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்புடன்இந்திய அணி விளையாட உள்ளது. 3வது ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் இங்கிலாந்து அணியும் களம் காண்பதால், இந்தப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version