இந்தியாவுடன் போர் நடந்தால் பாகிஸ்தான் தோற்றுப்போக நேரிடும்: இம்ரான்கான்

இந்தியாவுடன் வழக்கமான முறையில் போர் நடந்ததால் பாகிஸ்தான் தோற்றுப் போக நேரிடும் என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அணு ஆயுதங்கள் வைத்துள்ள இரு நாடுகள் மோதிக் கொள்வது, அணு ஆயுதப் போருக்குத் தான் வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரு நாடு, இறுதி வரை போரிட நேர்ந்தால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் தாம் போருக்கு எதிரானவன் என்றும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Exit mobile version