மீண்டும் தலைதூக்கும் கொரோனா – ஒரே நாளில் 60ஆயிரம் பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டின் புதிய உச்சமாக 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 59 ஆயிரத்து 118 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 18 லட்சத்து 46 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதிக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 60 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அதிகளவாக மகாராஷ்டிர மாநிலத்தில் 35 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் இந்த ஆண்டு முதல்முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது. ஒரேநாளில் மேலும் 257 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 949 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவிலான கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு பிறகு மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

Exit mobile version