அரசு கொடுத்த வீடு..மொத்தம் 100.. எல்லாமே ஓட்ட.. கவலையில் மக்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் அரசு சார்பில் கொடுக்கப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு சுமார் 100 பேருக்கு அரசு சார்பில் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. தற்போது அந்த வீடுகள் கடுமையாக சேதமடைந்து மேற்கூறை வழியாக மழைநீர் ஒழுகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு தங்களுக்கு கொடுக்கப்பட்ட வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Exit mobile version