சொகுசு காரில் சொகுசாக கஞ்சா கடத்திய கிராம நிர்வாக அலுவலர்!

புதுக்கோட்டை அருகே கிராம நிர்வாக அலுவலரே அவரது சொகுசு காரில் கஞ்சா கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கத்தக்குறிச்சியை சேர்ந்த ஜெயரவிவர்மா என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், வாகன தணிக்கையின்போது, கிராம நிர்வாக அலுவலரின் காரை நிறுத்தி சோதனை செய்த போலீசார், காரில் ஆயிரத்து 700 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், உடனிருந்த முன்னாள் ஊர்காவல்படை வீரர், காரைக்குடியை சேர்ந்த ஒருவர் என 3பேரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், 4 செல்போன்கள், ஆயிரத்து 700 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.YouTube video player

Exit mobile version