திருச்சி விமான நிலையத்தில் 66.26 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

வெளி நாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 66 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ தங்கப் படலத்தை திருச்சி விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முருகேஷ் என்பவர் எல்இடி தொலைக்காட்சி ஸ்டாண்டில் மறைத்து வைத்து 2 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 66 லட்சத்து 26 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version