திருச்சி விமான நிலையத்தில் ரூ.6.87 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், தஞ்சையைச் சேர்ந்த சாந்தி என்ற பயணி உடலில் மறைத்து எடுத்து வந்த 100 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இதேபோல், மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் கவிதா என்ற பயணி எடுத்து வந்த 3 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 99 கிராம் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version