தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – எம்.சி.சம்பத்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதாக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 23, 24 தேதிகளில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாக கூறினார். இந்த மாநாட்டில் உலக அளவில் இருந்து முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதாக கூறிய அமைச்சர் எம்.சி.சம்பத், அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

Exit mobile version