ரஞ்சி டிராபி – டெல்லி அணி கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பிர் விலகல்

ரஞ்சி டிராபிக்கான தொடரில் டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பிர் விலகியுள்ளார்.

ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரானது கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதில், டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 12-ந் தேதி இமாச்சல பிரதேசம் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்நிலையில் 37 வயதான இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிர், இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையடுத்து டெல்லி அணிக்கு 24 வயதான நிதிஷ் ராணா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 24 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version