பாகிஸ்தானில் போலீஸ் ரோந்து வாகனம் மீது துப்பாக்கிச்சூடு – 5 பேர் பலி

பாகிஸ்தானில் போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 போலீசார் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் கைபர் பகதுங்வா மாகாணத்துக்குட்பட்ட டேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தின் பேஹ்ரோ பகுதியில் ரோந்து பணியின் போது, வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிக்சூடு நடத்தினர். இந்த பயங்கர தாக்குதலில் 4 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட போலீசார் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்தில், கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

Exit mobile version