தினகரன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்ததில் பெண் சேலையில் தீப்பிடித்தது

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்ததில், பெண்ணின் சேலையில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

டிடிவி தினகரன் நேற்று உளுந்தூர்பேட்டைக்கு சென்றார். அப்போது அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையில் சென்ற பெண்ணின் சேலையில் தீப்பிடித்தது. இந்நிலையில் பொதுமக்கள் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த பெண்ணிற்கு காலில் தீக்காயங்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில் தினகரன் ஆதரவாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக செயல்பட்டதால், வாகன ஓட்டிகள் எரிச்சல் அடைந்தனர். தினகரன் சென்ற வாகனத்தில் வெளியே தொங்கிக் கொண்டு சென்றவர்களால், இரு சக்கர வாகனத்தில் சென்ற நபர் கீழே விழுந்தார். அவரை, காவலர்கள் விரைந்து மீட்டதால் உயிர் தப்பினார்.

Exit mobile version