News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

ஹெராயின் கடத்தலில் ஃபேமஸ் ஆனா சென்னை தம்பதி…

Web Team by Web Team
September 25, 2021
in Top10, TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
ஹெராயின் கடத்தலில் ஃபேமஸ் ஆனா சென்னை தம்பதி…
Share on FacebookShare on Twitter

குஜராத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியிடம் விசாரணை செய்ததில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

குஜராத் முந்த்ரா துறைமுகத்தில், சுமார் 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஆயிரத்து 4 கிலோ ஹெராயின் போதைப் பொருள், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சென்னையை சேர்ந்த மச்சாவரம் சுதாகர் மற்றும் அவரது மனைவி வைசாலி ஆகியோருக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயரில், ஆப்கானிஸ்தானிலிருந்து அந்த போதைப் பொருள் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

இதனையடுத்து, சென்னை போரூர் அருகே உள்ள கொளப்பாக்கத்தில் தங்கியிருந்த சுதாகர்-வைசாலி தம்பதியை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தொடர் விசாரணையில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த நால்வர் உட்பட, 8 பேரை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், சென்னை தம்பதி குறித்து தமிழக போலீசாரும் விசாரணையை துவங்கினர். இதில், சுதாகர் மற்றும் வைஷாலி இருவரும், 8 ஆண்டுகளாக கொளப்பாக்கத்தில் தங்கி, ஆசி சோலார் சிஸ்டம் என்ற பெயரில் போலி நிறுவனத்தை நடத்தி வந்தது தெரியவந்தது.

ஆப்கானிஸ்தான் ஹஸன் ஹுசைன் என்ற தனியார் நிறுவனம் மூலம், ஈரான் நாட்டு துறைமுகத்திலிருந்து, இந்தியாவில் உள்ள குஜராத் முந்த்ரா துறைமுகத்திற்கு டால்கம் பவுடரை இறக்குமதி செய்வதற்கு அனுமதி பெற்றதாகவும், இந்தியாவில் அமித் என்ற தரகர் மூலம், ஆப்கானிஸ்தானில் உள்ள ஜாவித் என்ற தரகரை தொடர்பு கொண்டு, இந்த இறக்குமதியில் ஈடுபட்டதாக சுதாகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அப்படி அனுப்பப்பட்ட இரண்டு கன்டெய்னர்களில் தான், 21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்பட்டதை, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், முன்னதாக இதே நிறுவனத்தின் பெயரில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து டால்கம் பவுடர் என்ற பெயரில் பொருட்கள் இறக்குமதி ஆகியுள்ளன. இந்நிலையில், அந்த பொருட்கள் போதைப்பொருள் தானா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, டெல்லி குல்தீப் சிங் என்பவர் பெயரில், இந்த பொருட்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. குல்தீப் சிங் என்பவர் பெயரில், இந்தியாவில் இறக்குமதி செய்யுமாறு ஆப்கானிஸ்தான் நிறுவனத் தரகர் அமித் கூறியதன் அடிப்படையில், ஆவணங்கள் தயாரித்து இறக்குமதி செய்ததாகவும் சுதாகர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், விஜயவாடா மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags: #Drugsmugglingarrestdrugsgujaratnewsj
Previous Post

சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Next Post

'சொன்னது ஒன்று', 'செய்வது ஒன்று'…. ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு; ஆட்சிக்கு பின் ஒரு பேச்சு…

Related Posts

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
அரசியல்

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் “உரிமைக்குரல்” விவாத நிகழ்ச்சி கிராமப் புறங்களில் முதலிடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

January 27, 2023
rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
edappadi k palanisamy
அரசியல்

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்தம் படத்திற்கு மலர்தூவி மரியாதை!

September 5, 2022
Next Post
'சொன்னது ஒன்று', 'செய்வது ஒன்று'…. ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு; ஆட்சிக்கு பின் ஒரு பேச்சு…

'சொன்னது ஒன்று', 'செய்வது ஒன்று'.... ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு; ஆட்சிக்கு பின் ஒரு பேச்சு...

Discussion about this post

அண்மை செய்திகள்

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!

பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு!

January 31, 2023
தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்!

தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்!

January 31, 2023
தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் ஆலோசனை!

தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் ஆலோசனை!

January 31, 2023
மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !

மேலும் 15 நாட்களுக்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை !

January 31, 2023
அதிமுகவுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது!

அதிமுகவுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது!

January 31, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version