கோவையில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயற்சி – சுதாரித்துக்கொண்ட வியாபாரிகள்!

கோவை புலியகுளத்தில் உள்ள கடைகளில் அரசு அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்க முயன்ற கும்பல் குறித்து வியாபாரிகள் சங்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புலியகுளம் பகுதியில் உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில், அரசு உயர் அதிகாரிகள் எனக் கூறி கொண்டு ஒரு கும்பல் சோதனை நடத்தியுள்ளது. அப்போது, அதிகாரிகளை மிரட்டிய அந்த கும்பல், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் நடவடிக்கைகளிலிருந்து தப்பலாம் என தெரிவித்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த வியாபாரிகள் சங்கத்தினர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டனர். இதையறிந்த அந்த கும்பல் அங்கிருந்து லாவகமாக தப்பியது. இந்த நிலையில், இரண்டு பெண்களுடன் வந்த அந்த கும்பல் குறித்து, கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

Exit mobile version