முன்னாள் அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பு !

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதிக்குட்பட்ட குமலன்குட்டை, செல்வம் நகர், முருகேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி பிரசாரம் மேற்கொண்டார். அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தென்னரசுவை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன், மண்டல செயலாளர் ஜீவா ராமசாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், ஐயாசாமி, ரமேஷ்,ராமமூர்த்தி, ஜெகதீசன், சரவணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Exit mobile version