கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டது திமுக – முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சனம்!

விடியா திமுக அரசு மக்களை பற்றி கவலைப்படாமல், கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்மமணி விமர்சித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் விடியா திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டில் டாஸ்மாக் தொடர்பாக விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது என்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும், திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும் இந்த அரசு மக்களை பற்றி கவலைப்படாமல், கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளது என காட்டமாக தெரிவித்தார்.

Exit mobile version