இன்று முதல் எதிர்கட்சித் தலைவர் சூறாவளி பிரச்சாரம்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடந்து வருகிறது. அதிமுகவின் சார்பாக வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு களமிறங்கியுள்ளார். அவரை ஆதரித்து கழகத்தின் இடைக்காலப் பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று முதல் ஈரோடு கிழக்குத் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம் செய்ய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுகவின் கோட்டையாக ஈரோடு கிழக்குத் தொகுதி மாறி வருகிறது. ஆனால் காங்கிரஸ் தரப்பு மிகவும் வலிமைகுன்றி உள்ளது. எதிர்கட்சித் தலைவரின் சுறுசுறுப்பான பிரச்சாரம் நிச்சயம் அதிமுகவிற்கு வெற்றிக் கனியைப் பறித்துத் தரும்.

Exit mobile version