சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களையே மிரட்டும் திமுக!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திமுக நகராட்சி சேர்மனாக இருக்கும் சரஸ்வதியின் கணவரும், முன்னாள் திமுக மாவட்ட நிர்வாகியுமான பூபதி, புதிய வீடு கட்டுவற்கு அனுமதி வழங்க லஞ்சம் கேட்டு பொதுமக்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. திமுக நிர்வாகியாக 37 ஆண்டு காலம் பணியாற்றி, திமுக வட்ட செயலாளராக உள்ள தன்னையும், தனது சகோதரி சாந்தியையும் கட்சி பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டுவதாகவும் நரசிம்மன் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. விடியா திமுகவினர் தொடர்ந்து தொண்டர்களை தாக்குவதும், அநாகரிகமாக பேசுவதும் வாடிக்கையாகி வருகிறது.

Exit mobile version