திருவள்ளூர்..தேர்வு எழுத வந்த மாணவிகளை குரங்குகள் துரத்துவதால் அவதி..!

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவிகளை குரங்குகள் துரத்துவதால் அச்சமடைந்துள்ளனர். திருவள்ளூரில் உள்ள ஆர்.எம்.ஜெயின் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வந்த 12-ம் வகுப்பு மாணவிகளை
பள்ளி வளாகத்தில் உள்ள குரங்குகள் துரத்தின. அதிக அளவு காணப்படும் குரங்குகளால் சிந்தனை சிதறுவதாக தெரிவித்த மாணவிகள், உடனடியாக குரங்குகளின் அட்டகாசத்தை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
YouTube video player

Exit mobile version