சூறைக்காற்று அடித்ததால் பறந்த பேருந்தின் மேற்கூரை! திருவள்ளூரில் பரபரப்பு!

காற்று வேகம் தாங்காமல் மேற்குரையை பிரித்துக் கொண்ட அரசு மாநகர பேருந்துவின் புகைப்படம்தான் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் திசை தெரியாமல் திகைத்து நின்றனர்.

மேலும் அரசு மாநகரப் பேருந்துகளில் மாநகரப் பேருந்தில் கூரைப்பிய்த்துக் கொண்டதால் சூறைக்காற்றில் நடுரோட்டில் பயணிகள் நின்று அவதிக்குள்ளாகினர். இதனால் சிறிது நேரத்திற்கு அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.  திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மாதவரம் மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்பொழுது சூறைக்காற்று வீசி வருவதால் தாழ்வான சில பகுதிகளில் வீட்டின் மேற்கூரை காற்றில் பிரிந்து சென்றது.

Exit mobile version