திமுக எம்பி வேலுச்சாமியின் முகநூல் பதிவில் தமிழுக்கு வந்த சோதனை: தமிழ் ஆர்வலர்கள் கேள்வி!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில், மத்திய கூட்டுறவு வங்கியின் நிதி உதவியுடன் புளி தட்டுதல், தரம் பிரித்தல், மற்றும் பேக்கேஜ் செய்தல் உள்ளிட்ட பணிக்கான, புதிய கட்டிடப் பணியை திமுக எம்பி வேலுச்சாமி தொடங்கி வைத்தார். இது தொடர்பான அவருடைய முகநூல் பதிவில், “புளி”-க்கு பதிலாக “புலி” என்றும், “ஏசி” குடோன் என்பதற்கு பதிலாக மதரீதியான சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். தமிழை வளர்ப்பதாக தம்பட்டம் அடித்து, அதற்காக நிதி ஒதுக்கி கொள்ளை அடிக்கும் விடியா திமுக எம்பி க்கு கூட, தமிழ் தெரியாமல் இருப்பதைக் கண்டு, இவர்களா தமிழை வளர்க்கப் போகிறார்கள், என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Exit mobile version