கலவரத்துக்கு காரணமான திமுகவினர் மற்றும் காவல்துறை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த கல்நார்ச்சாம்பட்டி கிராமத்தில், விதியை மீறி எருது விடும் திருவிழா நடத்தியதாக, 36 நபர்களை போலீசார் கைது செய்தனர். நாட்றம்பள்ளியை அடுத்த கல்நார்ச்சாம்பட்டி கிராமத்தில், எருது விடும் திருவிழாவில், போலீசார் நடத்திய தடியடியில் காயமடைந்த, பெரியகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த முஸ்ரப் என்கிற இளைஞர் உயிரிழந்தார். தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரி வந்த நிலையில், விதியை மீறி எருது விடும் திருவிழா நடத்தியதாக 36 நபர்களை போலீசார் கைது செய்த சம்பவம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது என்று கிராமத்தினர் தெரிவித்தனர்.

Exit mobile version