வாரிசுகள் இல்லாத ஆண் இறக்கும்பட்சத்தில் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கவேண்டும்?

வாரிசுகள் இல்லாத ஆண் இறக்கும்பட்சத்தில் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்து அரசாணையில் திருத்தம்செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை சேர்ந்த சங்கரனின் மகன் சந்தானம் கடந்த ஆண்டு பிப்ரவரியிலும், அவரது மனைவி அதற்கு ஒரு மாதம் முன்பும் இறந்துவிட்டனர். அவர்களுக்கு வாரிசு இல்லாத நிலையில், தங்கள் பெயரில் வாரிசு சான்றிதழ் தரக்கோரி அவரது சகோதரர் ராஜேந்திரனும், இரண்டு சகோதரிகளும் பெரம்பூர் வட்ட ஆட்சியரிடம் கடந்த மே மாத இறுதியில் விண்ணப்பித்துள்ளனர். தங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை எனவும் உரிய வாரிசு சான்றிதழை வழங்கக் கோரி  அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு வருவாய் துறை பிறப்பித்த அரசாணையில், மணமான ஆண் மரணிக்கும்பட்சத்தில் வாரிசு சான்றிதழ் எவ்வாறு வழங்க வேண்டுமெனு மட்டுமே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அரசு பிறப்பித்த அரசாணையில் மணமாகாத ஆண் இறக்கும்பட்சத்தில் வாரிசு சான்று வழங்குவது குறித்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. மணமாகி மனைவி மற்றும் வாரிசுகள் இல்லாத ஆணின் வாரிசு சான்றிதழ் வழங்குவது குறித்து தெளிவுபடுத்தாததால், அந்த அரசாணையில் குறைபாடு உள்ளது என்று மனுதாரர் தரப்பு வாதிட்டது.

இந்து வாரிசுரிமை சட்டத்திற்கு பொருந்தும்வகையில் அந்த அரசாணையில் இல்லை என்பதால், அந்த அரசாணையை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறுதியாக நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Exit mobile version