ஈரோட்டில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றம்

கொடிவேரி அணைப்பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து இருந்த தள்ளுவண்டி கடைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கொடிவேரி அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அணையின் நுழைவு வாயிலிருந்து அணை பகுதிக்கு செல்லும் நடைபாதையில் ஆக்கிரமித்துள்ள கடைகளினால் இடையூறு ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய கடைகளை பொதுப் பணித்துறையினர் அணையின் கீழ் பகுதிக்கு அகற்றினர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version