4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த தினகரன்

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான தினகரன் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 4 தொகுதிகளில் போட்டியிடும் தனது ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்களின் பெயர்களை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அதன்படி சூலூர் தொகுதியில் சுகுமாரும், அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல் ஹமீதும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் ஐ.மகேந்திரன் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தரராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Exit mobile version