விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் தீவிர பிரசாரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைப்பெறுகிறது. இதையொட்டி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். ஒரத்தூர், தும்பூர், அசோகபுரி உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து அதிமுக சட்டமன்ற கொறடா ராஜேந்திரன், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், ஜெயங்கொண்டம் ராமஜெயலிங்கம் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் வரவேற்றனர். பாமக, தேமுதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் கலந்துக்கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Exit mobile version