நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் அதிமுகவினர்

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தளவாய்புரத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிமராமத்து பணி மூலம் நீர் மேலாண்மையில் முதலமைச்சர் புரட்சி செய்து வருவதாக தெரிவித்தார்.

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி.சம்பத் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றியை மக்கள் உறுதிச் செய்துவிட்டார்கள் என தெரிவித்தார்.மேலும் ஊழலில் அரிச்சுவடியாக விளங்கும் ஒரே கட்சி திமுக தான், என்று அமைச்சர் எம்.சி.சம்பத் விமர்சித்தார்.

Exit mobile version