தினகரனை நம்பி அமமுகவில் யாரும் இருக்க வேண்டாம் : புகழேந்தி

பாஸ்போர்ட் மட்டும் கிடைத்து விட்டால் டிடிவி தினகரன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விடுவார் என அதிமுகவின் புகழேந்தி விமர்சித்துள்ளார்.

தென்காசியை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் பலர் அந்த கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா மற்றும் புகழேந்தி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதன் பின்னர் செய்தியாளரை சந்தித்த புகழேந்தி, டிடிவி தினகரனுக்கு பாஸ்போர்ட் மட்டும் கிடைத்து விட்டால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல தயாராக இருப்பதாக கூறினார். தினகரனை நம்பி யாரும் இனி யாரும் அமமுகவில் இருக்க வேண்டாம் என்றும் புகழேந்தி கேட்டுக்கொண்டார்.

Exit mobile version