அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாததால் முதல்வர், துணை முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு- அமைச்சர் தங்கமணி

அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாத காரணத்தால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துவதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழாவில் மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாததால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துவதாக குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடி சம்பவத்தில் வெளியாட்களால் தான் கலவரம் ஏற்பட்டதாக கூறிய அவர், மக்கள் விருப்பத்திற்கேற்ப ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் 20 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என அவர் கூறினார்.

Exit mobile version