டிடிவி தினகரன் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும் டிடிவி தினகரன் மீது 4 பிரிவுகளின்கீழ் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நாடாளுமன்ற டிடிவி தினகரன் ஆதரவாளர் ஆனந்த், முதுகுளத்தூரில் கடந்த 9 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, தேர்தல் ஆணையம் அனுமதித்ததைவிட அதிக வாகனங்களில் வந்து டிடிவி தினகரன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இது குறித்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர் ரமேஷ்குமார், முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்கள் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version