Bigboss-அ கூப்பிடுங்க..கோபத்தின் உச்சத்தில் வனிதா..

பிக்பாஸ் வீட்டில் இன்று 19வது நாள்.வனிதாவிற்கு வீட்டில் உள்ள அனைவரையும் பிக்பாஸ் சொல்லும் செயலை செய்ய வைத்துவிட்டால் அவர்கள் இறந்துவிடுவார்கள் என புது டாஸ்க் கொடுக்கப்பட்டது .வனிதாவும் அனைவரையும் கொலை செய்துவிட்டார்.அவர்கள் வீட்டின் முன்புறம் உள்ள சுடுகாட்டில் வெள்ளை உடை அணிந்து இருக்கவேண்டும்.அந்த டாஸ்க்கை அனைவரும் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

நேற்று வீட்டில் தலைவரான அபிராமியை இந்த டாஸ்க்கில் விருப்பம் காட்டதவரை பிக்பாஸ் தேர்வு செய்ய சொன்னார்.சேரன் மற்றும் சரவணனை அபிராமி தேர்வு செய்தார்.பின்பு, அவர்கள் ஜெயிலில் இருக்க வேண்டும் என பிக்பாஸ் கூற, சரவணன் ஒப்புக்கொள்ளாமல் சண்டையிட்டார்.இப்படியே நேற்றைய நாள் முடிவடைந்தது.

இன்றைய ப்ரோமோவில் வனிதா வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சண்டையிடுகிறார். நீங்க வேணும்னா சாக்‌ஷிக்கு கொடுத்துருங்க, எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல என வனிதா கூறுகிறார்.அதற்கு தர்ஷனோ என்னோட ஒப்பினியனை நான் சொல்லுறேன் என கூற, வனிதா கோபத்தில் bigboss-ஐ கூப்பிடுங்க என கத்துகிறார்.

சண்டையில் கத்திவிட்டு வெளியே வந்த தர்ஷன் ஷெரினிடம் பேச, ஷெரினோ உனக்கு இந்த டைம்ல ரொமேன்டிக் ஆனுமா என கேக்க,தர்ஷனோ வெட்கத்தில் சிரிக்கிறார்.

Exit mobile version