சத்தியமங்கலம் வனச்சரக அலுவலக சுற்றுச்சுவர்களில் அழகிய ஓவியங்கள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரக அலுவலக சுற்றுச்சுவரில் யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகளை ஓவியங்களாக வரையும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2013ல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஒவ்வொரு விதிமுறையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலம் கோவை சாலையில் உள்ள சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தின் சுற்றுச்சுவரில் வனவிலங்குகளை ஓவியங்களாக வரைந்து சுவரை அழகாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள், வனங்களின் இயற்கை காட்சிகள், யானைகளின் வழித்தடங்கள் குறித்த ஓவியங்கள் ஆகியவற்றை, ஓவியர்கள் தத்ரூபமாக வரைந்து வருகின்றனர். இந்த ஓவியங்களை அந்த வழியாக செல்பவர்கள் நின்று ரசித்து செல்கின்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள மற்ற கட்டிடங்களின் சுற்றுச்சுவர்களிலும் இதுபோன்ற ஓவியங்களை வரைய திட்டமிட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version