சத்தியமங்கலம் வனச்சரக அலுவலக சுற்றுச்சுவர்களில் இயற்கை காட்சி ஓவியங்கள்

சத்தியமங்கலம் வனத்துறை அலுவலக சுற்றுச்சுவர்களில் வனம் குறித்த இயற்கை காட்சிகளை சிறுவர் சிறுமியர்கள் வரையும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரக அலுவலக சுற்றுச்சுவரில், கணேஷ் என்ற ஓவியர், வனவிலங்குகளின் உருவங்களை தத்ரூபமாக வரைந்து வருகிறார். இந்த நிலையில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள், இயற்கை காட்சியியை வரைய முடிவு செய்யப்பட்டு,  தீபா, மணிமேகலை, மோகித் ஆகியோர் வரையும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுமியர்கள் வரையும் ஓவியம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

Exit mobile version