வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் தயாராகும் யானை ஆம்புலன்ஸ்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஹைட்ராலிக் யானை ஆம்புலன்ஸ் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. புலிகள் காப்பகம் என்பதால் வனப்பகுதியில் பல்வேறு வகை மேம்பாட்டு பணிகள் நடைபெறும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புலிகள் காப்பகத்திற்கென வாங்கப்பட்ட ஹைட்ராலிக் யானை ஆம்புலன்ஸ் பழுது பார்க்கும் பணி நடைபெற்று வந்தது.

பழுது பார்க்கும் பணி நிறைவுற்று தற்போது ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு புதிய வர்ணம் பூசப்பட்டுள்ளதால் வாகனம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

Exit mobile version