சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சுற்றுலா திட்டம் தற்காலிக நிறுத்தம்

கடும் வறட்சி காரணமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வண்ணபூரணி வனச்சுற்றுலா திட்டம் மார்ச் மாத இறுதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 6 வனச்சரகங்களிலும் தனித்தனியாக வேன் மற்றும் ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் என இருமுறை பயணிகளை அழைத்துச்சென்று வனப்பகுதியை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் வனப்பகுதியில் மரங்கள், செடிகொடிகள் காய்ந்து தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதன் காரணமாக மார்ச் 31-ம் தேதி வரை வனச்சுற்றுலா திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் அருண்லால் தெரிவித்துள்ளார்.

Exit mobile version