சத்தியமங்கலம் அருகே இறந்த யானையின் தந்தங்கள் வெட்டி கடத்தல்

சத்தியமங்கலம் அருகே யானையின் உடலிலிருந்து தந்தங்களை வெட்டி கடத்தியவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள காந்திநகர் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுபார்த்தபோது யானையின் உடலிலிருந்து தந்தங்கள் வெட்டியெடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து யானையின் உடலை வனத்துறை கால்நடை மருத்துவர் பிரேதப் பரிசோதனை செய்ததில் யானை வயிற்றுப்புண் காரணமாக இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் யானையின் தந்தங்களை வெட்டியெடுத்தவர்களை கண்டறிய மோப்பநாய் உதவியுடன் வனத்துறையினர் சோதனை நடத்தினர். யானையின் தந்தங்களை திருடியவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version