சத்தியமங்கலம் அருகே தலையில் கல்லைபோட்டு பெண் படுகொலை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தலையில் கல்லைபோட்டு பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பாரதிநகர் குமரன் கரடு பகுதியை சேர்ந்தவர் தேவி. இவர் கடந்த சில ஆண்டுகளாக தனது கணவனை பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார். தேவி அதே பகுதியில் சேர்ந்த மணி என்பவருடன் வெளியூருக்கு சமையல் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் இரவில் தேவி கல்லால் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரித்தனர். மோப்பநாய் தேவியின் வீட்டிலிருந்து 200 மீட்டர் தூரம் வரை ஓடி நின்றது. இச் சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version