சுகாதாரமான உணவு குறித்து விழிப்புணர்வு பேரணி

கேரளாவில் இருந்து புறப்பட்ட சுகாதாரமான உணவை வலியுறுத்தும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி தமிழகம் வந்தடைந்தது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆரோக்கியமான சுகாதார உணவை உண்ணுவதை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான சைக்கிள் பேரணி நடந்து வருகிறது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணியானது தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை வந்தடைந்தது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி தலைமையில் பேரணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்வஸ்த் யாத்திரை என்ற பெயரில் நடக்கும் இந்த பேரணியில், ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த சைக்கிள் பேரணி பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்து அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி டெல்லி சென்றடைய உள்ளது.

Exit mobile version