வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி

இளைஞர்களிடம் வாக்காளிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் வீதமாக சென்னை புரசைவாக்கத்தில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

செங்கல்வராயன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தொடங்கி மாநகராட்சி பூங்காவை சுற்றி இந்த பேரணி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் அதிகாரி கோவிந்தசாமி, கடந்த தேர்தல்களில் வாக்குப்பதிவு குறைவாக பதிவான இடங்களை தேர்வு செய்து அங்கெள்ளாம் இதுபோன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதாக தெரிவித்தார். நூறு சதவீதம் வாக்குப் பதிவு நடக்கும் வகையில் துண்டு பிரசுரம் மற்றும் காணொளி விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு பிரசாரங்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்குறிப்பிட்டார்.

Exit mobile version