மழை நீர் சேகரிப்பு மற்றும் டெங்கு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி

சென்னை தீவுத்திடலில் மழை நீர் சேகரிப்பு, நெகிழி ஒழிப்பு மற்றும் டெங்குவை கட்டுப்படுத்தல் போன்றவற்றை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version