பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தனியார் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியை நகராட்சி ஆணையர் இளவரசன் தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியின்போது, பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். இந்த ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவியர்கள் என கலந்து கொண்டனர்.

Exit mobile version