மாற்றுத் திறனாளிகளின் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனர். மக்களவைத் தேர்தலில் அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் தங்களது வாக்குகளைத் தவறாமல் அளிக்க வலியுறுத்தியும், 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தியும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நடைபெறவுள்ள தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட மூன்று சக்கர விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version