குமாரபாளையத்தில் தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் புகைப்பழக்கத்தின் கெடுதல் மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது. புகை மற்றும் குடி பழக்கத்தினால், ஏற்படும் தீங்கு குறித்தும், தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த பதாகைகளுடன் ஏராளமான பல் மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமிலும் அப்பகுதி மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

Exit mobile version