சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சாலை பாதுகாப்பு குறித்து கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

அண்ணா பல்கலைக் கழக நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தூய்மை இந்தியாவின் இளைஞர்கள் பங்கு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு தொடங்கிய இந்த பேரணி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்துநிலையம் , சங்ககிரி ரோடு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியின்போது, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Exit mobile version