News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார் அமித்ஷா!

Web Team by Web Team
November 21, 2020
in TopNews, தமிழ்நாடு, வீடியோ
Reading Time: 1 min read
0
கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை மக்களுக்கு அர்ப்பணித்தார் அமித்ஷா!
Share on FacebookShare on Twitter

திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களுக்கு அர்ப்பணித்தார்.

சென்னை கலைவாரணர் அரங்கில், பல்வேறு உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசைக்கப்பட்டது.

பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் தனபால், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.

விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசாக விநாயகர் சிலையை வழங்கினார். தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசாக நடராஜர் சிலையை வழங்கினார்.

முதலமைச்சர் தலைமையில் நடந்த விழாவில், 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்க திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அர்ப்பணித்தார்.

இதனைத் தொடர்ந்து, 61,843 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

1,620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை, அவிநாசி சாலையில் அமைக்கப்படவுள்ள உயர்மட்ட சாலைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து, சென்னை வர்த்தக மையத்தை 309 கோடி ரூபாயில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய அவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் 900 கோடி ரூபாயில் பெட்ரோலிய முனையம், அமுல்லைவாயலில் 1, 400 கோடி ரூபாயில் லூப் பிளாண்ட் அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இறங்குதளம் அமைக்கும் திட்டம் ஆகியவைக்கும் அடிக்கல் நாட்டினார்.

Tags: அமித் ஷாஅமித் ஷா தமிழகம் வருகைஎடப்பாடி பழனிசாமிஓ.பன்னீர்செல்வம்கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம்
Previous Post

“பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது” – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Next Post

உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் – தமிழ்நாடு அரசு அதிரடி

Related Posts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி
TopNews

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் பலகைகள் மறைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிருப்தி

July 1, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி
TopNews

கொரோனா தடுப்பு பணிகளில் அதிமுக அரசு அதிக கவனம் செலுத்தியது – எடப்பாடி பழனிசாமி

June 25, 2021
“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”
TopNews

“ஆளுநர் உரையில் எந்த வித முன்னோடியான திட்டங்கள் இடம்பெறவில்லை”

June 22, 2021
காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
TopNews

காற்றில் பறக்கவிடப்பட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

June 21, 2021
Next Post
உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் – தமிழ்நாடு அரசு அதிரடி

உள் ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் - தமிழ்நாடு அரசு அதிரடி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version