பாகிஸ்தானில் அனைத்து விமான சேவைகளும் ரத்து

பாகிஸ்தானில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகளை முடக்கி அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிக்கியிருக்கும் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் தூதரை அழைத்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை, அபிநந்தனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்நாடு மற்றும் வெளிநாடு விமான போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கி அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த நிலை நீடிக்க வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தானில் விமான சேவை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version