அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை -கல்வித்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், விடுப்பு விண்ணப்பம் அளிக்காமல் விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுமதியின்றி விடுப்பு எடுக்கும் போது அல்லது ஒழுங்கு நடவடிக்கையின் போது உயிரிழந்தால், பணி விதிகளின்படியே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Exit mobile version