பாக். தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல்: 9 பேர் பரிதாப பலி

பாகிஸ்தான் நாட்டின் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் தேரா இஷமாயில் கான் என்ற ஊரில், மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் சோதனைச்சாவடியில் இருந்த காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து தேரா இஷமாயில் கானில் உள்ள மருத்துவமனையில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். 4 காவல்துறையினர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர், அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Exit mobile version